அழுகையோடு சாப்பிட
மறுக்கும் நேரத்தில்,
நிலாநிலா ஓடிவா எனப்பாடும்
அம்மாவின் கை உணவோடு
வாயுள்ளே நுழையும்
நிலா வெளிச்சம்.
கல்வி உலா சென்று,
இரவில் வீடு திரும்புகையில்,
அப்பாவோடு உடன் வரும்
நிலா வெளிச்சம்.
கையில் மின்மினியை
ஒளித்து வைத்து,
தங்கைக்கு விளையாட்டு
காட்டும் நேரத்தில்,
தங்கையோடு சேர்ந்து
சிரிக்கும் நிலா வெளிச்சம்.
விடுமுறை நாள்களில்,
கண்ணாமூச்சி ஆடும்
தருணங்களில் மேகத்தின்
உள்ளே ஒளிந்து கொள்ளும்
நிலா வெளிச்சம்.
எல்லோருக்கும் ஏதோவொரு
தருணத்தில் நினைவுகளின்
புதையலாய் அமைந்து
விடுகிறது,
நிலா வெளிச்சம்
1 comment:
Unnodu sernthu nannum nila velichathai rasithen machiii
Post a Comment