Thursday, August 21, 2008

தடுமாற்றம்

உன் விரல்களைதானே
கண்டேன்!

பிறகேன் உன்
விழிகளை கண்டதுபோல்
இப்படி ஒரு தடுமாற்றம்
எனக்கு.

இதய கோவில்

என் இதயமும்
கோவில்தான்.

நீ வசிப்பதால்

நினைவும் கனவும்

என் கடைசி கனவு
ஞாபகம் இல்லை.
ஆனால் என்முதல்
நினைவு நீதான்.

புரிந்துகொள்

ஒருநாள் என்கவிதைகள்
உன்னை வந்து சேராவிட்டால்,
உன்னை மறந்துவிட்டேன்
என நினைத்துவிடாதே!

இறந்து போயிருப்பேன்
என புரிந்துகொள்.

பூக்களும் பேசும்

காகிதம் ஒன்றை கவிதை
ஆக்கி போனவளே!

இமைக்குள் நுழைந்து
இதயமாக ஆனவளே!

உன்மீது நான்கொண்ட
நேசம் பூக்களுக்கு
வாயிருந்தால் பேசும்

நீ மட்டும் போதும்

உன் நிழ்ல் போதும்
நான் கவலைகள் தொலைத்து.
கண்மூடி தூங்க.

உன் புன்னகை போதும்.
நான் இலையுதிர் காலத்திலும்
துளிர்த்து இருக்க.

நீ மட்டும் போதும்.
நான் நானாய் வாழ.

நீ மட்டும் போதும்

உன் நிழ்ல் போதும்
நான் கவலைகள் தொலைத்து.
கண்மூடி தூங்க.

உன் புன்னகை போதும்.
நான் இலையுதிர் காலத்திலும்
துளிர்த்து இருக்க.

நீ மட்டும் போதும்.
நான் நானாய் வாழ.

தாயும் நீயும்

ஒரேயொரு முத்தத்தில்
புரிந்துவிடும் தாயின்
பாசம்போல தான்
உன் நேசமும்.

ஒரேயொரு பார்வையில்
புரிந்துகொள்கிறேன்.

ஒத்திகை

ஒரேயொரு முறை
நீயென்னை பார்க்கும்
அந்த பார்வைக்காக
ஒராயிரம் முறை
எனக்குள் ஒத்திகை
பார்க்கிறேன்.

பார்த்தும் பாராமல்
நீ போகும் தருணங்களில்
கண்ணில் வியர்க்கிறேன்.

நினைவின் விதை

உனது நினைவின்
ஈரங்களில் விதையாக
நான் முளைத்தேன்.

உன் விழியிடும்
நாடங்களை நெஞ்சோடு
நான் களித்தேன்

குளிரும் சூரியன்

சுடும் சூரியனை
சுடுகின்ற பார்வை
உனதடி.
ஆனால் நீதொடும்
பார்வையில் குளிர்கிறேன்
நானடி.

நீ முடிவிலி.
போதும் உயிர்வலி.

தூக்கத்திலும் கவிதை

கண்கள் தூக்கம்
தழுவினாலும்
நெஞ்சம் கவிதை
தேடும்.

உன் நினைவுகள்
மட்டும்தானே
என்னை உயிராய்
மூடும்

உன்னை யாசிக்கிறேன்

கண்ணாடியில் விழும்
உன் பிம்பத்தைகூட
நேசிக்கிறேன்.

வாய்திறந்து நீ
பேசாத மெளனங்களை
கூட வாசிக்கிறேன்.

ஒவ்வொரு நொடியும்
உன்னையே உயிரென
சுவாசிக்கிறேன்.

தேய்பிறை இல்லாத
நிலவே உன்னை
மட்டுமே யாசிக்கிறேன்.

எனக்காக என்ன இருக்கிறது?

நீ விளையாட புல்வெளி.
நீ பயில கவிதைகள்.
நீ துயில தாய்மடி.
நீ சாய தந்தைதோள்.


என உனக்காக
எல்லாமே இருக்கிறது.

உன்னையும் உன்
நினைவுகளையும் தவிர.

கவிதை சுமக்கும் காற்று

எழுத்துமின்றி ஏடுமின்றி
கவிதை எழுதுகிறேன்
காற்றில்.

அதை தூக்கிச்செல்ல
முடியாமல் காற்று
கண்ணீர் விடுகிறது.
மேகத்தின் வழியாக.

காதலின் வடு

மனதின் வடுக்களில்
இன்னும் கசிகிறது
உதிரம்.

வலியை சொல்லி
அழமறுக்கிறது
அதரம்.

சோகத்தை மறைத்து
வைத்தாலும் காட்டி
கொடுத்து விடும்
கண்ணீர் விழிகள்.

ஏனடி மெளனம்

சில நேரங்களில்
மெளனம் என்பது
மன்னிப்பு.
சில நேரங்களில்
மெளனம் என்பது
தண்டனை.

நீ மன்னிக்கவோ
தண்டிக்கவோ நான்
தவறு ஏதும்
புரியவில்லை.

பிறகு ஏனடி
இந்த மெளனம்?

உன்னோடு வாழ்வேன்

வாழவேண்டும் உன்னோடு.
இல்லையேல்

புதைய வேண்டும்
மண்ணோடு.

நானும் மழையும்

வானில் இருந்து
மண்ணில் விழுந்ததும்,

மழைதுளி தன்னை
தொலைக்கிறது.

அதுபோலதான் நானும்
உனக்குல் விழுந்து
என்னை தொலைக்கிறேன்.

நானும் அலையும்

அலைகளும் நானும்
ஒரேயினம்.

கரையிடம் காதலை
சொல்ல முயன்று
தோற்று போவதில்.

நானும் ரோஜாவும்

நான் நந்தவனத்தில்
பூத்த ரோஜா.

உன் பாதம்படும்
என்பதற்காக,
பாலைவனத்தில்
கிடக்கிறேன்.

நானும் பேனாவும்

என் பேனாவிற்கு
என் பெயரை
எழுதவதைவிட உன்
பெயரை எழுதுவதுதான்
பிடிக்கிறது.

நானும் காகிதமும்

உன்னை நினைப்பதால்
காயப்படுவது நான்
மட்டுமல்ல.

என் காகிதங்களும் தான்.

விட்டிலின் நேசம்

நானும் ஒரு
விட்டில் பூச்சிதான்.

மரணம் எனத் தெரிந்தும்
உன்னை நேசிக்கிறேன்.

நீயும் நானும்

என் மூச்செல்லாம்
உனக்காக விடுகிறேன்.

உன் பேச்சிலாவது
என்னை சேர்த்துக்கொள்.

காதலும் காற்றும்

காதலும் ஒரு காற்றுதான்.

யார் வேண்டுமானாலும்
சுவாசிக்கலாம்.

இரண்டையுமே இழந்து
விட்டால் பிணம்தான்

மறத்தலும் இறத்தலும்

உன்னை மறத்தல்
இறத்தலிலும் கொடுமை.

இருக்கும்போதே இறக்க
என்னால் முடியாது.
அதனால் உன்
நினைவுகளுடனேயே
வாழ்ந்துவிடுகிறேன்.

ஏன்?

பூக்களுக்கு கூட புன்கைக்க
கற்றுகொடுத்தவளே

எனக்கு மட்டும் ஏன்
அழக் கற்று கொடுத்தாய்?

ஆறெழுத்து கவிதை

இறைவன் எழுதிய
ஆறெழுத்து கவிதையே

நீ அரங்கேறியது என்னவோ
என் இதயத்தில் தான்

நடமாடும் வானவில்

வானவில்லை சுமந்துவந்த
வண்ணத்து பூச்சியே,

உன்னை எனக்குள்
சுமப்பதும் ஒரு சுகம்தான்.

துரத்தி விடாதே

உறங்கும் போது அனுமதி
இன்றி உள்ளே நுழைந்தவளே!

என்னை வெளியில்
துரத்திவிடாதே!

கம்பன் காலத்தவன்

நான் கம்பன் காலத்தவன்.
இல்லையேல் உன்
அழகுக்கு எப்படி என்னால்
எவ்வாறு இலக்கணம்
சொல்ல முடியும்?

என் வானம்

மின்னல் பார்வை கொண்டு
வாழும் மின்மினியே
என்னை நீ வசிக்கும்
வானமாய் மாற்றிவிடு.

இதய சிறை

சிறையில் இருக்கும்
போதுதான் சிலர்
புத்தகம் எழுதினார்கள்.

ஆனால் இன்று நீ
இருக்கும் சிறையே
புத்தகம் எழுதுகிறது.

உன் மலர்கள் போதும்

அன்பே!

என் மரணத்திற்காக
நீ அழாவிட்டாலும்
பராவாயில்லை.

மரணம் அடைந்த உன்
கூந்தல் மலரையாவது
என் கல்லறையில் வீசு.

அழகான பூகம்பம்

உன் புன்னகையும்
பூகம்பம்தான்.

அதில் சிக்கிக்கொள்வது
நான் மட்டுமே.

சிக்கிமுக்கி பார்வை

உன் பார்வை ஒரு
சிக்கிமுக்கி கல்.

அது உரசும்போது
பற்றி எரிவது
நான் மட்டுமே!

காதல் புத்தன்

அன்பே நான்
புத்தனாகத் தயார்.

போதிமரமாய் நீ
இருப்பதானால்.

மெல்லினமே

மெல்லினமே

வல்லின வார்த்தைகளை
தவிர்த்து விடு.

அன்பே! உனது
வாய் வலிக்கும்.

காதல் அன்றில்

நானும் ஒரு அன்றில்
பறவைதான்.

உன் நினைவுகளை
துறக்கும் போது நான்
மடிந்து விடுவேன்.

விழிக்கும் நினைவுகள்

மெல்ல விடிகிறது
வானம்.

உறங்கிய விழிகள்
விழிக்கிறது.
விழித்தே கிடக்கும்
உன் நினைவுகளோ
உறங்க மறுக்கிறது.

வெயில்

மழையை விட
வெயில்தான் பிடிக்கும்.

அதுதான் உன்
நிழல் கூட அழகானது
என எனக்கு புரியவைத்தது.

தேடல்

உனக்குள் தொலைந்த
என்னை தேடிப் பார்க்கிறேன்.

கிடைக்கும் தொலைவில்
நானில்லை.
கொடுக்கும் நிலையில்
நீயுமில்லை.

நீ

நீ தொட்டு தந்தால்
பிச்சை பாத்திரம் கூட
அட்சய பாத்திரம் ஆகும்.

உன் பாதம் குத்திய
கற்கள்கூட பாவம்
செய்து விட்டோமென
நொந்து சாகும்.

காதல் பக்தன்

தூரத்தில் இருந்து கடவுள்
தொழும் பக்தன் போல
தொலைவில் இருந்து
இரசிக்கிறேன்.

உன் புன்னகையை.

கிறுக்கல்

கவிதை கூட கிறுக்கலாய்
தெரிகிறது.

உன் பெயரை
படித்ததில் இருந்து.

நீ

என் உதட்டு காகிதத்தில்
புன்னகை கவிதைகள்
இயற்றி செல்கிறாய்.

நீ எனக்கு
முதல் சேய்.
கடைசி தாய்.

உன்னை நான்
நேசிக்கவில்லை.
சுவாசிக்கிறேன்.

நகரட்டும் நாட்கள்

உனக்காக நான் காத்திருக்கும்
இந்த நிமிடங்கள் இனிக்கிறது.

நாட்கள் வேகமாக கரையட்டும்.
என்னுயிர் கரைவதைப் போல.

நினைவு விதைகள்

விதையாக விழுகிறது
உன் நினைவுகள்

பிறகு
சல்லிவேராகி ஆணிவேராகி
இன்று விருட்சமாய்
என்னை சூழ்ந்து
நிற்கிறது.

நீயும் ரோஜாவும்

பூத்து குலுங்கும்
ரோஜாக் கூட்டம்
நடுவில் உறங்கி
கிடந்தேன்.

உன்வாசம் வீசியது.
விழித்து பார்த்தேன்.
நீ இல்லை.
உனக்கு பதிலாய்
சில ரோஜாக்கள்.

நீயும் ரோஜாவும்

பூத்து குலுங்கும்
ரோஜாக் கூட்டம்
நடுவில் உறங்கி
கிடந்தேன்.

உன்வாசம் வீசியது.
விழித்து பார்த்தேன்.
நீ இல்லை.
உனக்கு பதிலாய்
சில ரோஜாக்கள்.

முடிகிறது

எப்படி முடிப்பதென
தெரியாத கவிதைகள்
கூட அழகாய்
முடிகிறது உன்னால்.

இருட்டும் வானவில்லும்

என்வானில் வானவில் கூட
இருட்டாய் தான் இருந்தது.

நீ வந்தபின்தான் இருட்டு
கூட வானவில் ஆனது.

நீயும் பூவும்

என் வீட்டு தோட்டத்தில்
ஆயிரம் பூக்கள்.

ஆனால் அவை ஒன்றிற்கு
கூட உன்னைபோல்
சிரிக்க தெரியாது.

நீ தரும் மரணம்

நீ தருவதாய்
இருந்தால்

மரணத்தை கூட
மகிழ்ச்சியாய்
ஏற்று கொள்வேன்.

காற்றின் அறியாமை

ஈரக்காற்று என்னை
தீண்டி கவிதை
எழுத தூண்டுகிறது.

வெறுமையாய் கிடக்கும்
இந்த மனதிற்குள்
கவிதை வராது,
கண்ணீர் மட்டும்தான்
வருமென காற்றுக்கு
தெரிவதில்லை.

ஆதாரம்

உன் அருகாமையில்
என் காலம் தொலையட்டும்.
உன் பாதங்கள்
என் கைரேகையாய்
மாறட்டும்.

என்னை சுற்றி நிகழும்
மாற்றங்கள் அனைத்திற்கும்
நீதான் ஆதாரம்.

உன்னை தவிர
எனக்கு யோசிக்க
வேறென்ன இருக்கிறது?

கவிதையை வாழவை

நான் எழுதி முடிக்க
முடியாத கவிதையை
எழுதிமுடித்து விட்டுபோ.

வார்த்தை மறந்து
வழிதேடி நிற்கிறேன்.

என் கவிதையையாவது
வாழவை.

நீ ஆகாயம்

வானத்தை வெறித்தபடி
படுத்து கிடக்கிறேன்.

ஆகாயமாய் விரிகிறது
உன் நினைவுகள்.

சில நினைவுகள்
பறவையாய் பறக்கின்றன.
சில நினைவுகள்
மேகங்களாய் மறைகின்றன.

புள்ளி

ஏதோவொரு தொலைவில்
புள்ளியாய் தெரிகிறாய்.

உன்னை காணும் வேட்கையில்
அருகில் வந்து உற்று
நோக்குகிறேன்.

உனது அசைவுகள் பேச்சு
நளினம் புன்னகை என
உனது என்பது எல்லாமே
எனக்கு பிடிக்க ஆரம்பிக்கிறது.

மெதுவாக ஆரம்பித்து என்னை
முழுதாய் ஆக்கிரமிக்கிறாய்.

இப்போது நீ பெரிய
பிம்பமாகி விட்டாய்.
ஆனால் நானோ சிறு
புள்ளியாய் தெரிகிறேன்.

புள்ளி

ஏதோவொரு தொலைவில்
புள்ளியாய் தெரிகிறாய்.

உன்னை காணும் வேட்கையில்
அருகில் வந்து உற்று
நோக்குகிறேன்.

உனது அசைவுகள் பேச்சு
நளினம் புன்னகை என
உனது என்பது எல்லாமே
எனக்கு பிடிக்க ஆரம்பிக்கிறது.

மெதுவாக ஆரம்பித்து என்னை
முழுதாய் ஆக்கிரமிக்கிறாய்.

இப்போது நீ பெரிய
பிம்பமாகி விட்டாய்.
ஆனால் நானோ சிறு
புள்ளியாய் தெரிகிறேன்.

தாடி

காதல் தோல்வி
என்கிறார்கள்.
கன்னத்தில் குழி
என்கிறார்கள்.

யாருக்கு தெரியப் போகிறது?

நானும் அவளும்
கைகோர்த்து நடந்த
புல்வெளியின் அடையாளச்
சின்னம் இதுவென்று.

நீயும் குழந்தை

ஒவ்வொரு குழந்தையை
காணும்போதும் ஆயிரம்
கடவுள்கள் தோன்றும்.

ஆனால்,

உனக்குள் மட்டும்தான்
ஆயிரம் குழந்தைகளை
காணமுடிகிறது.

நாங்கள்

எவ்வுயிர்க்கும் பாதகம் அறியோம்.
சிவமன்றி வேறொன்றும் தெரியோம்.

அன்பின் வழிதனில் நடப்போம்.
அன்பர் விழிதனில் கிடப்போம்.

ஞானத்தில் சிறந்து விளங்கினாலும்
நாணல் போலவே பணிவோம்.

வஞ்சனை புரிவார்தம் உயிர்
குடிக்க என்றும் துணிவோம்.

சிவமது மனதில் உள்ளவரை
பயமது நெஞ்சில் நிற்காது.

நன்மை புரியவே தோன்றினோம்.
தீமை புரிய தெரியோம்.

வலியது பட்டாலும் நேர்மை
விழிதனில் நடந்தே பழகினோம்.

எல்லா புகழும் சிவனுக்கே
எந்தன் வாழ்வும் அவனுக்கே
என்று அர்ப்பணித்த பின்பு
எது என்னை தின்னும்?
வணங்கும் இந்த மண்ணும்!

வேண்டாம் தேவதைகள் சகவாசம்

காரிகை உந்தன்
கருங் கூந்தலில்
பூத்திட,

ஆயிரம் மலர்கள்
கிடந்தாலும்,
ஒற்றை பூவைதான்
நீ பறிப்பாய்.

மற்ற பூக்கள்
எல்லாம் கண்ணீர்
விட தேவதை
நீயோ சிரிப்பாய்.

உன்னை போல
சிரிக்க முடியவில்லை
என ஏங்கியே
அவை சவத்திற்கு
மாலையாகும்.

வேண்டாமடி உனக்கு
தேவதைகள் சகவாசம்.

மானிடப் பெண்ணுக்கு
இத்தனை அழகாவென
மனம் பதறிவிடும்.

தேவதைகளாவது வாழ்ந்து
விட்டு போகட்டும்.

விட்டுவிடு!

உன் பிரிவு

இதயத்தின் வலியை
இமைகள் அறியாது.
அழுதிடும் போதும்
அதற்கு புரியாது.

உதிரும் பூக்கள்
மீண்டும் மலராது.
விழும் மழைத்துளி
விண்ணைப் பிரியாது.

நம்நட்பு மழை
அல்லவா!
மலராய் அது
மறையுமா?

இருப்பிடம் தூரம்
என்றாலும்
இதயம் தூரம்
சென்றிடுமா?

முள்ளில்லாமல் ரோஜா
கண் விழிப்பதில்லை.
பிரிவின்றி நட்பும்
பிறந்து வளர்வதில்லை.

குழந்தை போல்நானும்
குமுறுகின்ற இவ்வேளை,
குளமாய் மாறிய
விழியில் தீச்சுவாலை.

என் பகலில்
ஞாயிறாய் இருந்தாய்.
என் இரவினில்
திங்களாய் திரிந்தாய்.
என்வானைத் தனிமை
ஆக்கி இன்றேனோ
தூரம் சென்றாய்.



மழைமேகமாய் உன்
நினைவுகள்!

மனம் அதில்
நனைகிறது.


கவிதை சுமந்த
காகிதம் என்னை
கவலைகள் சுமக்க
வைத்து கொன்றாய்.

நாளையுனை காணும்வரை
நாளும் அழுவேனோ!
உன்னை எண்ணியே
நோயில் விழுவேனோ!

உலகின் விளிம்பில்
நீ இருந்தாலும்
உயிரின் நிழலென
உன்னுடன் வருவேன்.

கல்லறையில் என்
உடல் புதைந்தாலும்
கவிதைப் பூக்களை
உனக்காக தருவேன்.

எதுவும் இல்லை

என்னிடம்

சொல்வதற்கு எதுவும்
இல்லை!
மெளனத்தை தவிர.

இழப்பதற்கு எதுவும்
இல்லை!
உன்னை தவிர

மெளனம்

கடைசியாய்
நானும் அவளும்
சந்தித்து பிரியும்
வேளையில்

கண்பார்த்து மண்பார்த்து
கடைசியாய் சிலநிமிடம்
அவள் பேசியமொழி.

அன்பென்னும் அமுதம்

அமுதத்தை உண்டவர்கள்
மட்டும்தான் ஆண்டுகள்
கோடி வாழ்வார்களாம்!

உன் அன்பை உண்ட
நானும் ஆயுள்கோடி
வாழ்வேன் என்பதை
எப்போது உலகுக்கு
சொல்லப் போகிறாய்

அமுதம்

வேண்டுமா என்றாய்?
நீ எச்சில் படுத்திய
தின்பண்டத்தை!

யார்தான் வேண்டாம் என்பார்கள்?
தேவதை தரும் அமுதத்தை

Monday, August 18, 2008

வேண்டும்

ஒவ்வொரு விடியலிலும்
என்னை எழுப்பும்
தாய்முகமே!

நான் போர்வைமூடி
படுத்தால் செல்லமாய்
கிள்ளும் சேய்முகமே!

உன் கூந்தல் ஈரம்
கொண்டு என்னை குளிப்பாட்டு.
உன் விரலால் சிகை
கோதி என்னை தாலாட்டு.

பசியால் நான் துடித்தால்
உன் மென்கரங்களில்
ஊண் வேண்டும்.
எரிமலையாய் நான் வெடித்தால்
மனம் உன் குறும்புகளை
தினம் யாண்டும்.

வீட்டை விட்டு கிளம்பினால்
விளையாட்டாய் நீ
அழ வேண்டும்.
கண்ணீர் துடைக்கும்
வேளையில் கரம்பிடித்து
முத்தம் வேண்டும்.

ஒருவரை ஒருவர் கடிந்து
சின்ன ஊடல்கள் வேண்டும்.
காணாமல் போகும் நேரங்களில்
கரைகின்ற தேடல்கள் வெண்டும்.

வாரமொரு நாள் உன்
கூந்தலை பின்னி
பூச்சூட்ட வேண்டும்.
ஊருக்கு நீ சென்றால்
காந்த விழிகளை
எண்ணீ அழவேண்டும்.

மெத்தைகள் எல்லாம்
தொலைந்து உன்மடியில்
தூக்கம் வேண்டும்.
நோயால் நீ படுத்தால்
தாயாக நான் மாறும்
வரம் வேண்டும்.

மண் உன்னை திண்ணும்
முன்னே மரணம் என்னை
தின்ன வேண்டும்.
மரணம் வந்து தீண்டும்
வரை உன்னை மட்டுமே
எண்ண வேண்டும்.

பொய்யொன்று சொல்

கரையாக காலமெல்லாம்
காத்து இருக்கிறேன்.
அலையென நீ வந்து
தொடுவாயென!

அருகில் வந்து
இமைகள் மீட்டி
இதயம் துளைத்து
இயங்காமலே என்னை
இயந்திரம் ஆக்கி
மெளனமாய் செல்பவளே,

பொய்யொன்று சொல்!
"உனக்கு என்னை
பிடிக்குமென"

காதல்

ஏதோவொரு காலத்தில்
ஏதோவொரு கணம்
கண்ணோடு கண்
நோக்கியதற்கா
இத்தனை வலி!

கடைசி கவிஞன்

இதயத்தில் ரோஜாவாக
பூத்து குலுங்கும்
இனியவளே!

உன் முள்களை
சுமப்பதும் கூட
சுகமாய் இருக்கிறது.

காயம்பட்டு கண்ணீர்
நீ கசிந்தால்
நெஞ்சில் பூகம்பம்
மெதுவாய் கொல்கிறது.

அழகே!
உன்னை வருணிக்கும்
முதல் மற்றும்
கடைசி கவிஞன்
நானாய் இருக்கட்டும்.

ஒற்றையடி பாதை

நீ நடந்த
ஒற்றையடி பாதையில்
உன் மெல்லடி சுவடுகள்
அழியாமல் விலகி
நடப்பவன் நான்.

நீ அருகில்
இருக்கும் போது
மலராத அரும்புகள்
எல்லாம் இன்று
என்னை பார்த்து
நகைக்கின்றன.


காலத்தின் ஓட்டத்தில்
நீ இன்று இல்லை.
ஆனால் அந்த
ஒற்றையடி பாதை?

Thursday, August 14, 2008

புதிய பாரதம்

வாசம் வீசும் பூவாய்
நாம் வாழ்ந்து பார்ப்போம்.
நேசம் பேசும் தேசத்தில்
நாம் கைகள் கோர்ப்போம்.

மனிதனை மனிதனாக எண்ணுவோம்.
கிடைத்ததை பகிர்ந்து உண்ணுவோம்.

தன்னலம் மறப்போம்.
மண்நலம் காப்போம்.

நாகரிக சுவடுகளில்
நசுங்கி போன பழையன
எடுப்போம்.

அன்பின் இழைதனை
அதனில் கொடுப்போம்.

பாரத தாயின்
பாத அடிகளுக்கு
செருப்பாக மாறுவோம்.


இரத்தம் குடிக்கும்
யுத்த பேய்களின்
உயிர் குடிப்போம்.

இலஞ்ச ஊழல்
நச்சு பாம்புகளின்
தலைகளை உடைப்போம்.

நாட்டுக்கோர் கேடு
என்றால்
வீட்டுக்கொருவர்
இணைந்து துயர்
களைவோம்.

நம் அன்னையின்
கண்ணீர் துடைக்க
நீசர்களின் கரம்
வெட்டுவோம்.

வன்முறையின்
தலையில் ஓங்கி
கொட்டுவோம்.

பூமிபோல சிலகாலம்
பொறுப்போம்.
காலம் கரமீந்தால்
ஒறுப்போம்.

பழைய தடைகள்
உடைப்போம்.
புதிய பாரதம்
படைப்போம்.

Wednesday, August 13, 2008

சந்தேகம்

மறைத்து வை!
உன் தாவணியை.

உன் அழகை கண்டு
வானவில் தன்னை விட்டு
உன்னை வந்து ஒட்டி
கொண்டு விட்டதாக

வானத்திற்கு
சந்தேகம் வந்து விட போகிறது

Tuesday, August 12, 2008

கண்ணீர் தேசத்தின் அழகி

தொடுவானம் நீ.
தொலைதூரம் நான்.
தொட எண்ணினாலும்
சுட எண்ணுகிறாய்.

அடியே!
பாலை தேசம் நீ.
கள்ளி செடியாய் நான்.
முள்கள் என்மீது
முளைத்தற்காக
அழவில்லை.

உன் முகத்திற்காக
அழுகிறேன்.

கண்ணீர் தேசத்தின்
கடைசி அழகியே
மடியப் போவது
என் காதலல்ல.
உன் கர்வம்தான்.

நட்பு வாழும்

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு கனவு
உலகம் முடிவதில்லை.
உறங்கியே கிடக்கும்
விழிக்கு பொழுதுகள்
என்றுமே விடிவதில்லை.

பசுமையாய் நினைவுகள்
ஆயிரம் நெங்சில்
பார்த்தவுடன் மலரும்.
இன்பம் துன்பம்
இரண்டும் இணைந்தே
வாழ்க்கை வளரும்.

பிரிவு என்பது
நிரந்தரம் அல்ல!
உறவு பலப்படுமெ.
பிரிவை வென்ற
நட்பு வாழும்.
உண்மை புலப்படுமே.

மனமே!
அழும் மனமே!
நீ தாங்கி விடு.

தினமும் தீயில் எரிந்தாலும்
ஒருமுறை சிரித்து விடு.

தோல்வி என்பதும் கூட
ஒருவகை பாடமே.
வாழ்க்கை கற்கும்
பள்ளி கூடமே.

சோகம் இங்கு
யாருக்கு இல்லை.
அழுவதால் எதுவும்
முடிவதும் இல்லை.

காயங்கள் எல்லாம்
ஒருநாள் ஆறிவிடும்.
காலங்கள் நமக்காய்
இனிதாக மாறிவிடும்.

நம்பிக்கை மட்டும்
இருந்தால் போதும்.
நாளைய உலகம்
கையில் சேரும்.

முடிவு என்பது
இன்னொன்றின் தொடக்கம்.
நம் நட்பும்
இதில் அடக்கம்.

என்றும் நண்பனாய்
உனக்கு இருப்பேன்.
இன்றோடு கவலைகள்
எல்லாம் மறப்பாய்.

கேட்டு பார்

கடைசியாய் உன்னை
கண்டது எப்போது?
அறவே நினைவில்லை.

முதலாய் உன்னை
சுவாசித்த நாள்
மட்டும் இன்னும்
வசந்தமாய் வாழ்வில்.

நீ பேசுவாய்
என எதிர்பார்த்தே
ஊமையாய் போனது
எந்தன் நாட்கள்.

சிரித்த உன்
முகத்தை எண்ணி
அழுத படியே
இன்னும் நான்.

நீ நடந்த பாதைகளில்
பித்தனாய் அமர்ந்து
கிடப்பதில் ஏனோ
எனக்கொரு ஆறுதல்.

உன்னை எவ்வளவு
நேசித்தேன் என்பதை
வெள்ளை தாளை
கண்ணீரில் நனைத்து
கொண்டு இருக்கும்
என் பேனாவை
கேட்டு பார்.

கல்லூரி நட்பு

தனியாய் நடந்தேன்.
துணையாய் வந்தாய்.
கனவில் இருந்தேன்.
நினைவை தந்தாய்.

பூக்கள் உந்தன் சொந்தங்கள்.
புல்வெளி உன் பிம்பங்கள்.
மழையாய் வந்த புன்னகை
மலராய் நானும் நனைகிறேன்.

வழுக்கி விழும் நேரத்தில்
உன் வார்த்தை ஊன்றுகோல்.
தடுக்கி நான் விழுகையில்
தாங்கும் பூமியுன் கரங்கள்.


நெருப்பாய் சூழ்ந்த துன்பங்கள்
நீராய் உன் ஆறுதல்.
வெற்றி என்பது தொலைவானம்.
உன்னால் அதுவும் தொடுவானம்.

நிரந்தரம் இல்லா வாழ்வில்
நிறம்தரும் உந்தன் நட்பு.
சபிக்க பட்ட காலத்தில்
வரமாய் வருமுன் நட்பு.

இன்னொரு பிறவி இதுபோல
இறைவனை நாமும் கெட்போமா?
கண்ணை கசக்கி அழுதாலும்
கல்லூரி வழ்க்கை திரும்புமா?

இருவேறு வயிற்றில் பிறந்தாலும்
உருவான நட்பால் ஒன்றானோம்.
நட்பு நோய் தொற்றியதால்
நாம் நண்பர்கள் என்றானோம்.