வாசம் வீசும் பூவாய்
நாம் வாழ்ந்து பார்ப்போம்.
நேசம் பேசும் தேசத்தில்
நாம் கைகள் கோர்ப்போம்.
மனிதனை மனிதனாக எண்ணுவோம்.
கிடைத்ததை பகிர்ந்து உண்ணுவோம்.
தன்னலம் மறப்போம்.
மண்நலம் காப்போம்.
நாகரிக சுவடுகளில்
நசுங்கி போன பழையன
எடுப்போம்.
அன்பின் இழைதனை
அதனில் கொடுப்போம்.
பாரத தாயின்
பாத அடிகளுக்கு
செருப்பாக மாறுவோம்.
இரத்தம் குடிக்கும்
யுத்த பேய்களின்
உயிர் குடிப்போம்.
இலஞ்ச ஊழல்
நச்சு பாம்புகளின்
தலைகளை உடைப்போம்.
நாட்டுக்கோர் கேடு
என்றால்
வீட்டுக்கொருவர்
இணைந்து துயர்
களைவோம்.
நம் அன்னையின்
கண்ணீர் துடைக்க
நீசர்களின் கரம்
வெட்டுவோம்.
வன்முறையின்
தலையில் ஓங்கி
கொட்டுவோம்.
பூமிபோல சிலகாலம்
பொறுப்போம்.
காலம் கரமீந்தால்
ஒறுப்போம்.
பழைய தடைகள்
உடைப்போம்.
புதிய பாரதம்
படைப்போம்.
No comments:
Post a Comment