Tuesday, August 12, 2008

கண்ணீர் தேசத்தின் அழகி

தொடுவானம் நீ.
தொலைதூரம் நான்.
தொட எண்ணினாலும்
சுட எண்ணுகிறாய்.

அடியே!
பாலை தேசம் நீ.
கள்ளி செடியாய் நான்.
முள்கள் என்மீது
முளைத்தற்காக
அழவில்லை.

உன் முகத்திற்காக
அழுகிறேன்.

கண்ணீர் தேசத்தின்
கடைசி அழகியே
மடியப் போவது
என் காதலல்ல.
உன் கர்வம்தான்.

No comments: