Thursday, August 21, 2008

உன்னை யாசிக்கிறேன்

கண்ணாடியில் விழும்
உன் பிம்பத்தைகூட
நேசிக்கிறேன்.

வாய்திறந்து நீ
பேசாத மெளனங்களை
கூட வாசிக்கிறேன்.

ஒவ்வொரு நொடியும்
உன்னையே உயிரென
சுவாசிக்கிறேன்.

தேய்பிறை இல்லாத
நிலவே உன்னை
மட்டுமே யாசிக்கிறேன்.

No comments: