Thursday, August 21, 2008

நாங்கள்

எவ்வுயிர்க்கும் பாதகம் அறியோம்.
சிவமன்றி வேறொன்றும் தெரியோம்.

அன்பின் வழிதனில் நடப்போம்.
அன்பர் விழிதனில் கிடப்போம்.

ஞானத்தில் சிறந்து விளங்கினாலும்
நாணல் போலவே பணிவோம்.

வஞ்சனை புரிவார்தம் உயிர்
குடிக்க என்றும் துணிவோம்.

சிவமது மனதில் உள்ளவரை
பயமது நெஞ்சில் நிற்காது.

நன்மை புரியவே தோன்றினோம்.
தீமை புரிய தெரியோம்.

வலியது பட்டாலும் நேர்மை
விழிதனில் நடந்தே பழகினோம்.

எல்லா புகழும் சிவனுக்கே
எந்தன் வாழ்வும் அவனுக்கே
என்று அர்ப்பணித்த பின்பு
எது என்னை தின்னும்?
வணங்கும் இந்த மண்ணும்!

No comments: