Monday, August 18, 2008

ஒற்றையடி பாதை

நீ நடந்த
ஒற்றையடி பாதையில்
உன் மெல்லடி சுவடுகள்
அழியாமல் விலகி
நடப்பவன் நான்.

நீ அருகில்
இருக்கும் போது
மலராத அரும்புகள்
எல்லாம் இன்று
என்னை பார்த்து
நகைக்கின்றன.


காலத்தின் ஓட்டத்தில்
நீ இன்று இல்லை.
ஆனால் அந்த
ஒற்றையடி பாதை?

No comments: