கவிதைப்பூக்கள்
என் மனதில் பூத்த கவிதைப் பூக்களை இந்த இணைய உலகத்திற்கு வாசம் வீச அனுப்பி வைக்கிறேன்.
Monday, August 18, 2008
ஒற்றையடி பாதை
நீ நடந்த
ஒற்றையடி பாதையில்
உன் மெல்லடி சுவடுகள்
அழியாமல் விலகி
நடப்பவன் நான்.
நீ அருகில்
இருக்கும் போது
மலராத அரும்புகள்
எல்லாம் இன்று
என்னை பார்த்து
நகைக்கின்றன.
காலத்தின் ஓட்டத்தில்
நீ இன்று இல்லை.
ஆனால் அந்த
ஒற்றையடி பாதை?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment