Wednesday, August 29, 2007

அழகான அழுகை


நான் கதறி
அழும் போது
எல்லாம் ஆறுதலாக
நினைத்து கொள்வது
உன்னை தான்.

ஆனால் நீயே
நான் அழ காரணம்
என்றால் என்ன
செய்வேன்?

அழுகிறேன்
எனக்குள்
மௌனமாக

Wednesday, August 22, 2007

கவிதை பெண்ணே!



கவிதை பெண்ணே!

ஏட்டினில் எழுதும்

முன்னே

மறைந்து போனது

என்ன?

கானல் மலரே!

பறிக்கும் முன்னே

முட்களால் குத்தி

காயம் தந்த

மாயம் என்ன?

உன்னை எழுத

நானே வார்த்தை

ஆனேன்.

உன்னை எழுதி

ஏனோ தொலைந்து

போனேன்.

தூரிகை நானாக

வண்ணம் நீயாக

ஓவியம் வரையலாம்

நீரில் கரைந்தாலும்

நிம்மதியாக கரையலாம்

நம்பிக்கை


இடியாய் இதயத்தில்

ஆயிரம் வலி.


வாழ்க்கை வேள்வியில்

முயற்சிகள் பலி.


அவைதான் நம்மை

செதுக்கிய உளி.


கருகிய வாழ்வில்,

கனவினை தெளி.


மீண்டும் வருவோம்.

நம்பிக்கையே துளி

Friday, August 17, 2007

பிறந்த நாள் வாழ்த்து


வாசம் வீசும்
பூவிற்கு வாயிருந்தால்
வாசல் வந்து
உன்னை வாழ்த்தும்.

ஊமையாகி போனதால்
புன்னகை புரிந்து
பூமியில் மிதக்கிறது.

கம்பன் எழுதிய
ஏடுகள் காற்றில்
பறந்து உன்னை
காண வரும்.

நீ பிறந்த
இந்த நாளில்
கவிதைகள் கோடி
தரும்.

இலையுதிர் காலங்கள்
பசுமை மழை பொழியும்.

சூரிய நெருப்பில் இருந்து
பனி வழியும்.

வாழ்த்த வார்த்தைகள்
இன்றி தமிழ்
தடுமாறும்.

உன்னை ஏந்திக்கொள்ள
வானம் பூமியாய் இடம் மாறும்.

வேண்டும் நீ


விடியும் வரை

கதைகள் பேச

விழிக்கு அருகில்

வீற்றிரு பெண்ணே,


மொழிகள் எல்லாம்

சுமை தானே

மௌனம் மட்டும்

பூத்திரு கண்ணே,


மடி மீது தலை

சாய்த்து மழலையாக

நான் தூங்க

வரம் கொடு.

பிணமாகி நான்

தொலைந்தாலும்

உன் கூந்தல் பூவை

வீசி வீடு.


முகில் நீரை எடுத்து

முகம் துடைக்கும்

தேவதையே,


என் கண்ணீர் துளி

உன் காலடியில்

சிந்துவது தெரிகிறதா?


பகலில் குளிரும்

நிலவு நீயே,

என்னை தாலாட்டும்

நீயும் தாயே,


உன் மூச்சு காற்றினால்

ஒரு முகவரி

சொல்லி வீடு.


அந்த வெப்பம்

கை பிடித்து

உந்தன் வேதனை

தீர்த்து வைப்பேன்


உனக்கு மட்டுமே

மாலை சூடுவேன்.

இல்லையேல் மண்ணில்

என்னை மூடுவேன்.


புன்னகை பூ வீசி

என்னை கொன்றவளே,

என்னிடம் மலர் தூவி

எங்கோ சென்றவளே,


இன்னும் உயிரோடு

உனக்காக இருக்கிறேன்.


என்னை எப்போதும்

ஏனோ மறக்கிறேன்.


வலிகள் தாங்கி விட

நெஞ்சில் வலிமை

இல்லையடி


ஒரு வார்த்தை

பேசி விட்டால்

மனம் எரிமலை

பிளக்குமடி.


உன் நினைவுகள்

சுமப்பதும் கூட

சுகமாய் தோன்றுதடி


விளக்கில் விழுந்து

சாகும் வீட்டில்

பூச்சி ஆகிவிட்டேன்.


பிஞ்சு விரல்

தொட்டால்

உயிர் பிறவி

பயன் அடையும்

தீராத ஆசைகள்


உயிர்கள் எதுவும்
இல்லாத தேசத்திலே
என்னோடு நீ
வேண்டும்.
வார்த்தைகள் எல்லாம்
வற்றும் வரை
வாய்மொழி
கோடிபேச
வேண்டும்.
நானம் கொண்டு
நீ நகரும் வேளையில்
என் உயிர்
ஊனமாக வேண்டும்.
நானோ உன்
கண் நோக்க
நீயோ மண் நோக்க
முடிவிலா இந்த
விளையாட்டு தொடர
வேண்டும்.
இப்படி தீராத
ஆசைகள் கோடி
அடி நெஞ்சில்
ஒன்றாவது நடக்குமா?
பதில் சொல்லடி
என் நிலவே

நீயும் கவிதை


கவிதை கேட்டு
வெகு நாள்கள்
ஆகி விட்டது.
பெண்ணே
ஒரே ஒரு முறை
உன் பெயரை
சொல்லி விட்டு போ.

நேசிக்கிறேன்


நீ என்னை
நேசிப்பதற்கே
யோசிக்கிறாய்.

ஆனால் நானோ
உன்னை
நேசிப்பதற்காகவே
சுவாசிக்கிறேன்

உனது நினைவுகள்



நான் உடைந்து
விடுவேன் என
தெரிந்தும்,
என்னை உடைத்து
செல்பவளே,
நான் உடையும்
போது ஒழுகும்
உதிரத்தை சுவாசித்து
பார்.
உன் நினைவுகளின்
வாசம் மட்டுமே
அதில் வீசும்

அழகான பூக்காரி

என் வாசலுக்கு
வாசத்தை கொண்டு
வரும் பூக்காரி நீ.

வண்ணங்களை எல்லாம்
பூக்களில் ஊற்றி விட்டு,
நிறம் இழந்து நிற்கும்
வானவில் நீ.

புன்னகையை விலைபேசி
பூக்களுக்கு விற்று விட்டு,
மௌனத்தால் சிரிக்கும்
மழலை பூ நீ.

பூக்கள் இருக்கும்
தோட்டத்திற்கு போகாதே
என சொல்லியும்
கேட்காமல் செல்பவளே,

இங்கே பார்!

மலர் எது
என தெரியாமல்,
வண்ணத்துப்பூச்சிகள்
உன் கன்னத்தை
மொய்க்கின்றன.

வண்ணத்துப்பூச்சிகளுக்கு
இந்த நிலமை என்றால்,
பாவம் பூக்கள்!

நீ கடந்து செல்லும்
ஒவ்வொரு நிமிடமும்
வண்ணத்துப்பூச்சி தான்
வருகிறதோ என
எதிர்பார்த்து ஏமாந்து
போகின்றன.

பூக்களுக்கு கூட
சிரிக்க கற்று கொடுத்தவளே,

எனக்கு மட்டும்
ஏனோ அழ கற்று
கொடுக்க முயல்கிறாய்?

உன் நினைவு
வாசத்தில்,
நம் காதல்
தேசத்தில்

உனக்காக நான்………………