கவிதை பெண்ணே!
ஏட்டினில் எழுதும்
முன்னே
மறைந்து போனது
என்ன?
கானல் மலரே!
பறிக்கும் முன்னே
முட்களால் குத்தி
காயம் தந்த
மாயம் என்ன?
உன்னை எழுத
நானே வார்த்தை
ஆனேன்.
உன்னை எழுதி
ஏனோ தொலைந்து
போனேன்.
தூரிகை நானாக
வண்ணம் நீயாக
ஓவியம் வரையலாம்
நீரில் கரைந்தாலும்
நிம்மதியாக கரையலாம்
No comments:
Post a Comment