Friday, August 17, 2007

வேண்டும் நீ


விடியும் வரை

கதைகள் பேச

விழிக்கு அருகில்

வீற்றிரு பெண்ணே,


மொழிகள் எல்லாம்

சுமை தானே

மௌனம் மட்டும்

பூத்திரு கண்ணே,


மடி மீது தலை

சாய்த்து மழலையாக

நான் தூங்க

வரம் கொடு.

பிணமாகி நான்

தொலைந்தாலும்

உன் கூந்தல் பூவை

வீசி வீடு.


முகில் நீரை எடுத்து

முகம் துடைக்கும்

தேவதையே,


என் கண்ணீர் துளி

உன் காலடியில்

சிந்துவது தெரிகிறதா?


பகலில் குளிரும்

நிலவு நீயே,

என்னை தாலாட்டும்

நீயும் தாயே,


உன் மூச்சு காற்றினால்

ஒரு முகவரி

சொல்லி வீடு.


அந்த வெப்பம்

கை பிடித்து

உந்தன் வேதனை

தீர்த்து வைப்பேன்


உனக்கு மட்டுமே

மாலை சூடுவேன்.

இல்லையேல் மண்ணில்

என்னை மூடுவேன்.


புன்னகை பூ வீசி

என்னை கொன்றவளே,

என்னிடம் மலர் தூவி

எங்கோ சென்றவளே,


இன்னும் உயிரோடு

உனக்காக இருக்கிறேன்.


என்னை எப்போதும்

ஏனோ மறக்கிறேன்.


வலிகள் தாங்கி விட

நெஞ்சில் வலிமை

இல்லையடி


ஒரு வார்த்தை

பேசி விட்டால்

மனம் எரிமலை

பிளக்குமடி.


உன் நினைவுகள்

சுமப்பதும் கூட

சுகமாய் தோன்றுதடி


விளக்கில் விழுந்து

சாகும் வீட்டில்

பூச்சி ஆகிவிட்டேன்.


பிஞ்சு விரல்

தொட்டால்

உயிர் பிறவி

பயன் அடையும்

No comments: