Friday, August 17, 2007

அழகான பூக்காரி

என் வாசலுக்கு
வாசத்தை கொண்டு
வரும் பூக்காரி நீ.

வண்ணங்களை எல்லாம்
பூக்களில் ஊற்றி விட்டு,
நிறம் இழந்து நிற்கும்
வானவில் நீ.

புன்னகையை விலைபேசி
பூக்களுக்கு விற்று விட்டு,
மௌனத்தால் சிரிக்கும்
மழலை பூ நீ.

பூக்கள் இருக்கும்
தோட்டத்திற்கு போகாதே
என சொல்லியும்
கேட்காமல் செல்பவளே,

இங்கே பார்!

மலர் எது
என தெரியாமல்,
வண்ணத்துப்பூச்சிகள்
உன் கன்னத்தை
மொய்க்கின்றன.

வண்ணத்துப்பூச்சிகளுக்கு
இந்த நிலமை என்றால்,
பாவம் பூக்கள்!

நீ கடந்து செல்லும்
ஒவ்வொரு நிமிடமும்
வண்ணத்துப்பூச்சி தான்
வருகிறதோ என
எதிர்பார்த்து ஏமாந்து
போகின்றன.

பூக்களுக்கு கூட
சிரிக்க கற்று கொடுத்தவளே,

எனக்கு மட்டும்
ஏனோ அழ கற்று
கொடுக்க முயல்கிறாய்?

உன் நினைவு
வாசத்தில்,
நம் காதல்
தேசத்தில்

உனக்காக நான்………………

No comments: