Friday, August 17, 2007

தீராத ஆசைகள்


உயிர்கள் எதுவும்
இல்லாத தேசத்திலே
என்னோடு நீ
வேண்டும்.
வார்த்தைகள் எல்லாம்
வற்றும் வரை
வாய்மொழி
கோடிபேச
வேண்டும்.
நானம் கொண்டு
நீ நகரும் வேளையில்
என் உயிர்
ஊனமாக வேண்டும்.
நானோ உன்
கண் நோக்க
நீயோ மண் நோக்க
முடிவிலா இந்த
விளையாட்டு தொடர
வேண்டும்.
இப்படி தீராத
ஆசைகள் கோடி
அடி நெஞ்சில்
ஒன்றாவது நடக்குமா?
பதில் சொல்லடி
என் நிலவே

1 comment:

Vishnu... said...

வார்த்தைகள் எல்லாம்
வற்றும் வரை
வாய்மொழி
கோடிபேச
வேண்டும்.


super Lines...Really Nice..