Friday, August 17, 2007

பிறந்த நாள் வாழ்த்து


வாசம் வீசும்
பூவிற்கு வாயிருந்தால்
வாசல் வந்து
உன்னை வாழ்த்தும்.

ஊமையாகி போனதால்
புன்னகை புரிந்து
பூமியில் மிதக்கிறது.

கம்பன் எழுதிய
ஏடுகள் காற்றில்
பறந்து உன்னை
காண வரும்.

நீ பிறந்த
இந்த நாளில்
கவிதைகள் கோடி
தரும்.

இலையுதிர் காலங்கள்
பசுமை மழை பொழியும்.

சூரிய நெருப்பில் இருந்து
பனி வழியும்.

வாழ்த்த வார்த்தைகள்
இன்றி தமிழ்
தடுமாறும்.

உன்னை ஏந்திக்கொள்ள
வானம் பூமியாய் இடம் மாறும்.

No comments: