Monday, August 18, 2008

வேண்டும்

ஒவ்வொரு விடியலிலும்
என்னை எழுப்பும்
தாய்முகமே!

நான் போர்வைமூடி
படுத்தால் செல்லமாய்
கிள்ளும் சேய்முகமே!

உன் கூந்தல் ஈரம்
கொண்டு என்னை குளிப்பாட்டு.
உன் விரலால் சிகை
கோதி என்னை தாலாட்டு.

பசியால் நான் துடித்தால்
உன் மென்கரங்களில்
ஊண் வேண்டும்.
எரிமலையாய் நான் வெடித்தால்
மனம் உன் குறும்புகளை
தினம் யாண்டும்.

வீட்டை விட்டு கிளம்பினால்
விளையாட்டாய் நீ
அழ வேண்டும்.
கண்ணீர் துடைக்கும்
வேளையில் கரம்பிடித்து
முத்தம் வேண்டும்.

ஒருவரை ஒருவர் கடிந்து
சின்ன ஊடல்கள் வேண்டும்.
காணாமல் போகும் நேரங்களில்
கரைகின்ற தேடல்கள் வெண்டும்.

வாரமொரு நாள் உன்
கூந்தலை பின்னி
பூச்சூட்ட வேண்டும்.
ஊருக்கு நீ சென்றால்
காந்த விழிகளை
எண்ணீ அழவேண்டும்.

மெத்தைகள் எல்லாம்
தொலைந்து உன்மடியில்
தூக்கம் வேண்டும்.
நோயால் நீ படுத்தால்
தாயாக நான் மாறும்
வரம் வேண்டும்.

மண் உன்னை திண்ணும்
முன்னே மரணம் என்னை
தின்ன வேண்டும்.
மரணம் வந்து தீண்டும்
வரை உன்னை மட்டுமே
எண்ண வேண்டும்.

No comments: