கடைசியாய் உன்னை
கண்டது எப்போது?
அறவே நினைவில்லை.
முதலாய் உன்னை
சுவாசித்த நாள்
மட்டும் இன்னும்
வசந்தமாய் வாழ்வில்.
நீ பேசுவாய்
என எதிர்பார்த்தே
ஊமையாய் போனது
எந்தன் நாட்கள்.
சிரித்த உன்
முகத்தை எண்ணி
அழுத படியே
இன்னும் நான்.
நீ நடந்த பாதைகளில்
பித்தனாய் அமர்ந்து
கிடப்பதில் ஏனோ
எனக்கொரு ஆறுதல்.
உன்னை எவ்வளவு
நேசித்தேன் என்பதை
வெள்ளை தாளை
கண்ணீரில் நனைத்து
கொண்டு இருக்கும்
என் பேனாவை
கேட்டு பார்.
No comments:
Post a Comment