தனியாய் நடந்தேன்.
துணையாய் வந்தாய்.
கனவில் இருந்தேன்.
நினைவை தந்தாய்.
பூக்கள் உந்தன் சொந்தங்கள்.
புல்வெளி உன் பிம்பங்கள்.
மழையாய் வந்த புன்னகை
மலராய் நானும் நனைகிறேன்.
வழுக்கி விழும் நேரத்தில்
உன் வார்த்தை ஊன்றுகோல்.
தடுக்கி நான் விழுகையில்
தாங்கும் பூமியுன் கரங்கள்.
நெருப்பாய் சூழ்ந்த துன்பங்கள்
நீராய் உன் ஆறுதல்.
வெற்றி என்பது தொலைவானம்.
உன்னால் அதுவும் தொடுவானம்.
நிரந்தரம் இல்லா வாழ்வில்
நிறம்தரும் உந்தன் நட்பு.
சபிக்க பட்ட காலத்தில்
வரமாய் வருமுன் நட்பு.
இன்னொரு பிறவி இதுபோல
இறைவனை நாமும் கெட்போமா?
கண்ணை கசக்கி அழுதாலும்
கல்லூரி வழ்க்கை திரும்புமா?
இருவேறு வயிற்றில் பிறந்தாலும்
உருவான நட்பால் ஒன்றானோம்.
நட்பு நோய் தொற்றியதால்
நாம் நண்பர்கள் என்றானோம்.
No comments:
Post a Comment