Monday, August 18, 2008

பொய்யொன்று சொல்

கரையாக காலமெல்லாம்
காத்து இருக்கிறேன்.
அலையென நீ வந்து
தொடுவாயென!

அருகில் வந்து
இமைகள் மீட்டி
இதயம் துளைத்து
இயங்காமலே என்னை
இயந்திரம் ஆக்கி
மெளனமாய் செல்பவளே,

பொய்யொன்று சொல்!
"உனக்கு என்னை
பிடிக்குமென"

No comments: