Tuesday, August 12, 2008

நட்பு வாழும்

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு கனவு
உலகம் முடிவதில்லை.
உறங்கியே கிடக்கும்
விழிக்கு பொழுதுகள்
என்றுமே விடிவதில்லை.

பசுமையாய் நினைவுகள்
ஆயிரம் நெங்சில்
பார்த்தவுடன் மலரும்.
இன்பம் துன்பம்
இரண்டும் இணைந்தே
வாழ்க்கை வளரும்.

பிரிவு என்பது
நிரந்தரம் அல்ல!
உறவு பலப்படுமெ.
பிரிவை வென்ற
நட்பு வாழும்.
உண்மை புலப்படுமே.

மனமே!
அழும் மனமே!
நீ தாங்கி விடு.

தினமும் தீயில் எரிந்தாலும்
ஒருமுறை சிரித்து விடு.

தோல்வி என்பதும் கூட
ஒருவகை பாடமே.
வாழ்க்கை கற்கும்
பள்ளி கூடமே.

சோகம் இங்கு
யாருக்கு இல்லை.
அழுவதால் எதுவும்
முடிவதும் இல்லை.

காயங்கள் எல்லாம்
ஒருநாள் ஆறிவிடும்.
காலங்கள் நமக்காய்
இனிதாக மாறிவிடும்.

நம்பிக்கை மட்டும்
இருந்தால் போதும்.
நாளைய உலகம்
கையில் சேரும்.

முடிவு என்பது
இன்னொன்றின் தொடக்கம்.
நம் நட்பும்
இதில் அடக்கம்.

என்றும் நண்பனாய்
உனக்கு இருப்பேன்.
இன்றோடு கவலைகள்
எல்லாம் மறப்பாய்.

No comments: