Thursday, August 21, 2008

வேண்டாம் தேவதைகள் சகவாசம்

காரிகை உந்தன்
கருங் கூந்தலில்
பூத்திட,

ஆயிரம் மலர்கள்
கிடந்தாலும்,
ஒற்றை பூவைதான்
நீ பறிப்பாய்.

மற்ற பூக்கள்
எல்லாம் கண்ணீர்
விட தேவதை
நீயோ சிரிப்பாய்.

உன்னை போல
சிரிக்க முடியவில்லை
என ஏங்கியே
அவை சவத்திற்கு
மாலையாகும்.

வேண்டாமடி உனக்கு
தேவதைகள் சகவாசம்.

மானிடப் பெண்ணுக்கு
இத்தனை அழகாவென
மனம் பதறிவிடும்.

தேவதைகளாவது வாழ்ந்து
விட்டு போகட்டும்.

விட்டுவிடு!

No comments: