Tuesday, December 02, 2008

நீ இருப்பதால்


தடுமாறும்
நேரங்களில்
தடமாக
நீ இருந்தாய்.

காய பட்டு
நிற்கையில் உன்
நட்பே எனக்கு
மருந்தாய்.

நான் பேசினாலும்
ஏசினாலும் ஏசு
போலவே பொறுமை
காத்தாய்.

உன் வெற்றிகளை
எல்லாம் என்
வெற்றியாகவே
பெருமை பூததேன்.

அகராதியில்
நட்பென்னும் வார்த்தைக்கு
பொருளாய் உன்
பெயரை பொறிக்கலாம்.

நீ உடன்
இருந்தால் இதயத்தை
அன்பால் நிறைக்கலாம்.


உனக்காக நான்
செலவழித்த
கண்ணீரை நீ
அறிவாய்.

ஒவ்வொரு விடியலிலும்
உன்முகத்தில் நான்
விழித்த நேரங்கள்
பெரிதாய்.

நோய்வாய் பட்டு
நீ விழுந்தாய்.
நோன்புகள் பல
நான் இருந்தேன்.

தாயாய் சேயாய்
நீ வரவே
தவங்கள் பல
நான் புரிந்தேன்.

தவறு ஏதும்
புரியாமல் உன்னோடு
பேசாமல் நான்
கிடந்தேன்.

எதிரே உன்னை
கண்டாலும் வேறு
திசையில் நான்
நடந்தேன்.


அன்று

கண்ணீர் துடைக்க
நீ இருந்தாய்.

உன் வருகைக்கு
பின் அழுவதற்கு
காரணமும் அழிந்து
போனது.

நீ இருக்கும்
காரணத்தால் சோகமும்
சந்தோஷம் ஆனது.

நமக்கு பிரிவு
மரணத்தில் மட்டுமே.

No comments: