Thursday, December 04, 2008

நீ வரும் நாளுக்காக



உன் அருகாமையில் என்
கர்வம்தனை புதைத்துவிடு.

என்னை அணைத்தே துண்டு
துண்டாய் சிதைத்துவிடு.

என்னை முழுதுமாய் குழைத்து
கண்மையாய் கரைத்துவிடு.

விரலினால் தீண்டி என்
விரதங்கள் தீர்த்துவிடு.

உன் கொலுசாய் என்
இதயத்தையே துடிக்கவிடு.

கரங்களில் என் முகமேந்தி
காலமெல்லாம் வெடிக்கவிடு.

மடிந்து நான் விழுகையில்
மடிதனை தந்துவிடு.

நான் வீடுதிரும்பும் பொழுதுகளில்
வாசலுக்கு வந்துவிடு.

உயிரெல்லாம் உயிர்த்து இருக்கும்
உன்னத தோழியே!
பிரிவில் செல்லமாய் கொன்று
பிரியுது ஆவியே!

எப்போதடி வரப் போகிறாய்?

அணுஅணுவாய் என்னுள்
ஆராய்ச்சிகள் செய்ய.
அன்பால் ஆயுளெல்லாம்
அகத்தை கொய்ய.

1 comment:

ராஜ ராஜன் said...

மிக மிக அதி அற்புதம்