Monday, December 01, 2008

பேராசை


வாழ்க்கை தரும்
என நினைத்த
உன் முகம்
தான் இன்று
வலியையும்
தருகிறது.


நீ உடன்
இல்லை என
உணரும் போது
என் நிழலுக்கும்
வலிக்கிறது.

வரமாய் மனைவி
வாய்க்க வேண்டும்
என சிலர்
நினைப்பது இயல்பு.

ஆனால்
வரமே மனைவியாய்
வர வேண்டும்
என நான்
நினைப்பது
கொஞ்சம் பேராசை
தான்.

இருந்தாலும்
அதை
நிறைவேற்றி விடு.

No comments: