விழியசைவில் ஒரு
விளம்பரமா?
அதை வாங்கிட
என்னுயிர் வருமா?
உன் விரல்நுனியில்
புது சுயம்வரமா?
என்னை மணந்திட
தேவதை வரம்தருமா?
தூரத்தில் நின்றுப் பார்த்து
தூரல்கள் தெறிக்கிறாய்.
அருகில் வந்து நின்று
அடைமழை பொழிகிறாய்.
உன் நிழல் தீண்டும்
வேளையில் என்
விரதங்கள் தீருதடி.
என் தனிமையில்
உன் நினைவுகள்
கவிதைகள் கூறுதடி.
யாரும் நடக்காத
ஒற்றையடிப் பாதை
எனக்குள் ஓர் ஊர்வலம்
நடத்திப் போகிறாய்.
நிழலும் பிரிகின்ற
வேளையில் நீயே
உயிராகிப் போகிறாய்.
அடுத்தப் பிறவியில்
நம்பிக்கை இல்லை.
பெண்ணே,
இருந்து விடு
என்னுடன்.
இதயம் துடிப்பதை
நிறுத்தும் வரை.
No comments:
Post a Comment