Wednesday, November 26, 2008

கவிதை வரவில்லையடி


கவிதை வரவில்லையடி.

உன்னை காணும் போதும், நீ
நாணும் போதும் உயிரோடு
ஒட்டிக் கொண்டநேசம்
இருந்தும் கவிதை வரவில்லையடி.

வானத்தை வெறித்துப் பார்க்கையில்
நீரலைகளின் வெற்றிடத்தை நிரப்புகையில்
தோன்றிய தேவதையுன் முகம்
உடனிருந்தும் கவிதை வரவில்லையடி.

முழுநிலா என்னை முறைக்க,
காகிதங்கள் காற்றில் துடிக்க,
பேனாமுனை கரம் பிடித்தும்
பேரழகே கவிதை வரவில்லையடி.

ஆயிரம் பாவணைகள் உன்
அழகு முகம் தோற்றுவிக்க,
நான் தோற்று நிற்கும்
தருணமும் கவிதை வரவில்லையடி.

கவிதையே கவிதையை
என்ன செய்தாய்?
கவிதை வரவில்லையடி.

2 comments:

Anonymous said...

அடடா...வார்த்தைகள் இல்லையடா உன் நேசமிக்க காதல் கவிதையை புகழ...
என்றும் வாழட்டும் இன்பமாக உன் உயிர் காதல் இந்த கவிதையை போல...

உதயகுமார் said...

நன்றி மச்சான்........

கடவுளால் மட்டுமே அதை நிறைவேற்ற முடியும்