Friday, November 14, 2008

எங்கு போவேன்?


உன் விழிகள் தான்டி
பெண்ணே நான் எங்கு
போவேன்?
உன் விரல்கள் தீண்டாமல்
கண்ணே நான் என்ன
ஆவேன்?
என் நினைவுலகில்
நீராடும் தேவதை,
தாங்குமோ உன்
நினைவில் சாவதை.

தாமரைப் பூத்திருக்கும்
தடாகம் இந்த தண்ணீரைக்
கொஞ்சம் ஏந்துமா?
விழிகளாய் வாழும் கயல்கள்
இரண்டு என் இதயக்
குளத்தில் நீந்துமா?


வார்த்தைகள் எதுவுமின்றி
அருகில் வருவேன்.
உன் விழிகள் பேசுவதால்
ஊமையாகி விடுகிறேன்
உதிர்ந்து போன
உரையாடலால்.

தூக்கமில்லாத இரவுகளும்
தேதி தெரியாத நாள்களும்
உன் நினைவுகள் துப்பி
விட்டுச் சென்றவை தான்.

எனக்கானவை என நான்
நினைத்திருந்த எல்லாமும்
சிதைந்து போகின்றன
நீயென் முன் சிரிக்கையில்.

துண்டு துண்டாய்
உடைந்தவற்றை சேகரித்து
முடிக்கும் போது மறுபடியும்
சின்னா பின்னமாக்கிப்
போகிறது உன் புன்னகை.

இப்போது

நினைப்பதற்கும்
இணைப்பதற்கும்

எதுவும் இல்லை
உன்னைத் தவிர.

No comments: