Friday, November 14, 2008

வாழவைத்துப் போ


இது பிழையா
இல்லை சரியா
உன் விழிதனில்
வந்து மாட்டிக்
கொண்டேன்.

இது நிரந்தரமா
இல்லை நின்றிடுமா
உன்னில் என்
வாழ்வை நான்
கண்டேன்.

போர்க் களம் காணும்
வீரனைப் போல் நாணும்
உன்விழி காண்கையில்
நாளும் பெருமிதமே!

தீக்குளத்தில் என்னை
எறிந்தாலும் திங்கள்
உன் தாய்மையின் சேய்மை
எனக்கு தருமிதமே!

கல்லறையில் பிணத்தின்
மேல் இருந்த பூவென்னை,
கருவறையில் கடவுளின்
மேல் மிதக்க விட்டாய்.

முள்களின் ரத்த வாசம்
மட்டுமே நுகர்ந்த என்னை,
முதல் முறை பெண்மையின்
வாசம் அறிய வைத்தாய்.

யாரோ என்றே
நானிருந்தேன்.
நீதான் அதுவென
உணர்த்தி விட்டாய்.

காற்றில் வெடித்து
சித்றும் பஞ்சாக
நெஞ்சு வெடித்து
பறக்கிறது.

பெண்ணே ஒரு
தும்பியை பிடிப்பது
போல் அதை நீயும்
கொஞ்சம் துரத்திப்
பிடித்துக் கொள்.

ஆள்காட்டி விரலும்
உன்னை அன்றி
வேறொருவரை
காட்டுவதில்லை.

உயிர் மீட்டி உடல்
வாட்டி விழி பாராமல்
செல்பவளே!

ஒரு தடவை என்
ஆவி தடவி போ.
உயிர் மேவிப்
பயனடையும்

No comments: