Monday, November 24, 2008

யாருக்கு ஐந்தறிவு


யாருக்கு ஐந்தறிவு?

வரிசையாக செல்லும்
எறும்பு கூட்டத்தை
எரிச்சலோடு கலைக்கும்
மனிதக் கால்கள்.

கூட்டமாக உண்ணும்
காக்கைகளை கடுப்போடு
கலைக்கும் மனிதக்
கரங்கள்.

நன்றியோடு வரும்
நாயை நாகரிகம்
இன்றி அதட்டும்
மனிதக் குரல்கள்.

எல்லோரும் சொல்கிறார்கள்.
விலங்கிற்கு ஐந்தறிவாம்.
மனிதனுக்கு ஆறறிவாம்.

No comments: