Friday, November 06, 2009

யார் காரணம்


அங்கிங்கெனாத படி
எங்கும் நிறைந்திருக்கின்றன
கழுமரங்கள் என்
சிரத்தினை எதிர்பார்த்து!

காதல் காதல் என
கதறி வறண்ட தொண்டையில்
கடைசியாய் தாகத்திற்காக
நிரப்பப் படுகின்றன
என் இரத்தத் துளிகளும்
கண்ணீர் மழையும்.

ஜாதிகள் ஊன்றிய
நச்சு விதையில் எனது
காதலும் நசுங்குகிறது.
உண்மை மனம் இறக்க
இயலாமல் தீயிலும்
நோயிலும் பொசுங்குகிறது.

நேசித்த இதயம்
என்னை இழக்க தயாராய்.
அவளுக்காக அனைத்தையும்
இழந்த நான் அவளையே
இழந்துவிட்டு என்ன செய்ய?

1 comment:

Sent Bobby said...

niyum un kadalum pari-suthamanathu machii...
Atharku perukira(laaykana) ithayam avalidam kidayathu...

Ur true luv should get a true heart... I'm damn sure it is on its way to reach you (shortly)