Monday, November 30, 2009

இளைஞனே


சூரியன் வானில்
எரியும் போது,
மெழுகு வர்த்தியின்
உதவியை நாடுபவனே!

உலகமே உனக்காக
இருக்க,
நீயோ வட்டத்திற்குள்
வாழ்கிறாய்.

சோகத்தால் போசுங்கியவனே
சொர்க்கம் நமக்காக.

நம்பிக்கை என்னும்
அணுவில் தான்
வெற்றியின் சக்தி
புதைந்துள்ளது.

துவண்டு அழுதது
போதும்!
தோண்டி எடுக்க
துணி.

இறந்து பிறப்பதை
விட,
பிறந்து இறப்பது
மேல்.
அதனால் நண்பனே!
கனவினை கருவில்
கலைக்காதே!
அவை வளரட்டும்.
ஒன்றாவது உருபெரும்.

தோல்வி மூட்டைகளை
சுமந்து
நம்பிக்கை முதுகு
குனிந்தவனே

வியர்வை அரும்புகள்
வெற்றி பூக்கக்கள்
ஆகும் காலம்
வெகுதொலைவில் இல்லை.

நடக்க நடக்க
தான் புதரில்
பாதை தோன்றும்.
நீ தோற்க
தோற்க்கதான்,
வெற்றியின் வழி
தென்படும்.

தளராதே!
நம்பிக்கையோடு எழு.

1 comment:

Sent Bobby said...

Ithu ithu thanda nee...
Each & Every word shows your own signature...