பேருந்து நிறுத்தத்தில்
தலைநிறைய மல்லிகை.
உதட்டில் சாயம்.
ஒரு கைப்பையோடு
அழகான பாவை.
"காதலனுக்காக காத்திருக்காளோ!
அதுமாதிரி பெண்ணாக இருக்குமோ!
அலுவலகம் முடிந்து திரும்புகிறாளோ!
ஒருவேளை ஓடிப்போகப் போறாளோ!"
என யூகங்கள் கட்டுப்பாடின்றி
ஓடிக் கொண்டே இருந்தன.
யூகங்கள் ஆணுக்கனாவை.
அவைப் பெண்களை
மட்டுமே தின்னுகின்றன.
ஆண்களை அவை
தீண்டுவதில்லை.
1 comment:
nenjai nakita machiii... eppadi da... eppadi ippadiyellam yosikira....
Post a Comment