Monday, October 06, 2008

நீ என் இல்லறவியல்


உன்னோடு நடக்கையில்
உலகம் என்னையே
உற்றுப் பார்ப்பதாய்
தோன்றுதடி.

உனக்கும் எனக்கும்
உள்ள இடைவெளியில்
காற்று உட்கார்ந்து
கவிதை பேசுதடி.

சிலுவைகள் சுமந்த
மனம் இன்று சிறகுகள்
விரிக்கிறது.

உன் கூரிய விழிகள்
கூறும் வார்த்தைகளை
கவனமாய் படிக்கிறது.

வறண்டு போன
உதடுகள் உன்பெயர்
உரைக்கையில் கொஞம்
ஈரம் பெறுகிறது.

உன் விழிகளைப் பார்த்து
பேசுகையில் கள்ளம்
இல்லா மழலைகள்
கொஞ்சும் ஞாபகம்.

நீ நாணும் போது
வானிடை வளையும்
வானவில்லின் நினைவலை.

இந்த இயந்திரவியல்
மாணவனின் இதயத்தில்
பூத்த இன்பவியல்.
நீ என் இல்லறவியல்
ஆனால் இதயத்தில்
என்றுமில்லை
துன்பவியல்.

No comments: