Friday, October 24, 2008

கடன்காரி



என் இரவுகளுக்கு
மின்மினிப் பூச்சிகளை
இறக்குமதி செய்தவளே!

என் கனவிற்குத்
துணையாய் உன்
நினைவுகளை அனுப்பி
வைத்தவளே!

என் காதலை வாங்கிக்
கொண்டுத் திருப்பித்
தராமல் அடம்பிடிக்கும்
கடன்காரியே!

நான் கொடுத்த கடன்
அட்டவணையைக்
குறித்துக் கொள்.

என் பார்வைகளின்
கொஞ்சல்கள்.
உனக்காக காத்திருந்த
நிமிடங்கள்
தூங்காமல் விழித்திருந்த
இரவுகள்.
உன்னோடு தொடங்கிய
விடியல்கள்.
இடைவெளி இல்லாத
பேச்சுகள்.
தனிமையில் தவித்த
புலம்பல்கள்
நிழலோடு கொடுத்த
முத்தங்கள்.
நிஜத்தில் புரிந்த
நாணங்கள்.
உனக்காய் பூத்த
புன்னகை.

எல்லாவற்றையுமே
வட்டியும் முதலுமாய்
கொடுத்துவிடு,
என் அன்பான
கடன்காரி

No comments: