Friday, October 24, 2008

மனதின் மனைவி


என் சபலங்களும்
சலனங்களும் சடலாமாக
காதலை சமர்ப்பித்தவள்
நீ தான்.

என் தேகமும்
மோகமும் தொலைந்துவிட
என்னை உன்விழிமடியில்
உறங்க வைத்தவளும்
நீ தான்.


ஒரு தாய்மையை
ஒரு சேய்மையை
எனக்காய் உருவாக்கி,
உன் பெண்மையை
உயிர் மென்மையை
அன்பின் கருவாக்கி
பார்வை ஊசிகளால்
என் ரத்தத்தில்
செலுத்தியவளும்
நீதான்.

முகம் தேய்ந்து
கிடந்த எனக்கொரு
முகவரி கொடுத்து,
என் முகபாவணைகளில்
முழு உயிரையும்
முற்றிலும் படித்து,
எனக்காக புன்னகை
பூத்து காத்திருந்தவளும்
நீதான்

சினம் கொண்டு
நான் சீறியபோதும்,
குணம் கொண்டு
என்னைக் கொஞ்சி
நின்றவளும் நீதான்.

எனக்கே எனக்காய்
ஏழுப் பிறவியும்
துணையாய் வர
இறைவன் அனுப்பிய
தூதுவளும் நீதான்

No comments: