Wednesday, October 22, 2008

உன்னோடு


உன்னோடு பேசும்
ஒவ்வொரு நொடியும் என்
வாழ்வில் இனிக்கிறதே!

என்னோடு நடக்கும்
என் நிழல்கூட எங்கே
நீயெனக் கேட்கிறதே!

ஆகாயம் தாண்டி
பூலோகம் தோண்டி
என் காதல் செழிக்கிறதே!

நெஞ்சம் நனைக்க
மஞ்சம் கனக்க
உன்னுயிர் என்னில் வழிகிறதே!

உன்னோடு சிரித்து
உன்னோடு முறைத்து
என் மேகம் பொழிகிறதே!

No comments: