Wednesday, October 01, 2008

உனக்கென இருப்பேன்




நீ கண்கள் திறக்க
பல பண்கள் இசைப்பேன்.
ஒரு கவிதை பிறக்க
உன் அழகை ரசிப்பேன்.

உன் முடிமுதல் அடிவரை
பூ முத்தம் கொடுப்பேன்.
உன் இடைதனில் பிடிபட
நான் நித்தம் துடிப்பேன்.

நீ கொஞ்சும் போது
நான் குழந்தை ஆவேன்.
நீ கோபம் கொண்டால்
நான் கொஞ்சம் சாவேன்.

அழகு விழியில் நீர்த்துளி
வழிந்தால் அமிலம் பொழியாதோ!
அன்பின் மிகுதியால் நாம்
அழுதால் ஆனந்தம் வழியாதோ!

என் இதழ்கள் அழைந்தால்
அது உன்பெயர் தானடி.
உன் இதயம் இசைய
இந்த தயக்கம் ஏனடி?

உன் மடிமீது சாய்ந்து
ஒரு மழலையாக தூங்குவேன்.
உன் இதழ்களின் ஈரம்பட
விரல் நகமாக ஏங்குவேன்.

மழைக் கூந்தல் மலர்களை
என் மனதோடு தாங்குவேன்.
மரணம் என்றாலும் உன்
நினைவோடு உயிர் நீங்குவேன்.

No comments: