Tuesday, September 30, 2008

முத்தத்தமிழ்




அன்றொரு நாள்
அழகைச் சந்த்திதேன்.
அன்று முதல்
தேவதையைத் தினமும்
சிந்தித்தேன்.

காற்றில் ஓர்வாசம் வந்தால்
கண்கள் கம்பன்
கவிமகளைத் தேடும்.

கொடியில் இலை அசைந்தால்
குறள் இடையோ என
ஐயம் மூளும்.

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு கவிதை
அவளுக்காக எழுதினேன்.

தந்துவிட தைரியம்
இன்றி எனக்குள்
நானே புழுங்கினேன்.

அவள் புத்தனின் எதிரி.
ஆசையைத் தூண்டுவாள்.
கூந்தல் மலர்களை உதறி
பூமியைத் தோண்டுவாள்.

சதையில் செய்த
சிற்பம் அவள்.
இதழ்கள் பேசும்
சித்திரம் அவள்.

அவள்

பேசினால் இயல்.
நடந்தால் இசை.
பார்த்தால் நாடகம்.
மொத்தத்தில் அவள்
முத்தமிழ்.
எனக்காக பிறந்த
முத்தத்தமிழ்.

No comments: