Tuesday, September 30, 2008

எங்கே இருந்தாய்



காதலே என்
காதலே கருங்
கேசத்தால் என்னைக்
கொன்றதேன்?
தனிமையில் என்னை
விட்டு தூரம் நீ
சென்றதேன்?

உறங்கும் வரை
உந்தன் சிந்தனை
உறங்கிய பின்பும்
உளறும் எந்தனை,
கண்ணீரில் தள்ளிவிட்டு
கடுமமில கொல்லியிட்டு
காணாதேசம் சென்று
தந்தனை தண்டனை.

என் மூச்சுக் காற்றில்
உன் முகம் கண்டேன்.
உன்னைக் கண்ட பின்பே
உணவு உண்டேன்.

இத்தனை நாள் எங்கு
இருந்தாய்?
தனிமையில் நானோ
இறந்தேன்.

புன்னகை சுமந்த
உதடுகள் எங்கே?
பூக்கள் சுமந்த
கூந்தல் எங்கே?
என்னைப் பார்த்த
பார்வை எங்கே?
என்னை ஈர்த்த
பாவை எங்கே?

தேடியே நான்
தேய்ந்து போனேன்.
வாடியே நான்
மாய்ந்து போனேன்.

வேண்டுமே உன்மடி
என்றுமே!

நீ நகம் கடிக்கையில்
நனைந்து போனதே என்னுயிர்.
நீ முகம் காண்கையில்
மறந்துப் போனதே என்பெயர்.

என் கவிதைத் தோட்டம்
கண்ணீர் சிந்தி அழுதது.
என் கட்டுடல் அது
செந்நீர் சிந்தி விழுந்தது.

கானல் தேசம் என்தேகம்.
மழையாக நீவிழக் கூடாதா?
காந்தம் உமிழும் பார்வைகள்
என்கண்கள் கண்டு நாணுமா?

மறுபிறவி இருந்தால்
துறவியாவேன்.
என்னைத் துறந்து
போவேன்.
உன்னுள் இறந்து
போவேன்.

பாதங்கள் என் கரங்கள்
தாங்குமா?
மெல்லிடை அதில் என்னுயிர்
நீங்குமா?

நீ பேசிய பேச்சு.
எண்ணி விடுகிறேன்.
வெப்ப மூச்சு.
உன் நினைவுகளோடு
என் காலம் செல்லும்.
உன் நினைவையன்றி
எது என்பெயரைச்
சொல்லும்?

No comments: