Tuesday, September 23, 2008

நீ நான் நாம்


விடியல் பூத்த வானமே,
உன்னில் விடியாமல்
மறைந்திருக்கும் விண்மீன்
நான்.

என் பகலினில்
பதுங்கி இருந்து
இரவுகளில் நடமாடும்
இயந்திரவியல் பூ நீ.

எனக்கான கடிகாரத்தில்
ஓடாமல் காத்திருக்கும்
காலத்தின் கடிவாளம் நீ.

உனக்கான நாள்குறிப்பில்
உருளாமல் உனக்காக
உட்கார்ந்து இருக்கும்
நேரத்தின் நீர்த்திவலை நான்.

நிழலாய் போகும் வாழ்வில்
நிஜமாய் நிற்கும்
நினைவு நீ.

நிஜமெனத் தோன்றும்
நிழலில் கரையும்
கனவு நான்.

No comments: