Monday, September 15, 2008
அழுகை
நான் அழுவதற்கான காரணங்களை
முதல் முதலாய் சொல்லி
கொடுத்தது நீ தான்.
உன்னைபோல் எதுவும் ஆழமாய்
என்னை பாதிப்பதில்லை.
ஆழமாய் எனக்குள் கிடக்கும்
எதற்கும் உன் பெயர்தான்.
தனிமையில் கிடந்து வாடும்
நேரங்களில் எல்லாம் துணையாகிப்
போகின்றன உனக்காக நான்
சிந்தும் கண்ணீர் துளிகள்.
உனக்கு தெரியாமல்
அறையை தாளிட்டு கொண்டு
அலறி கதறும் என்
அழுகையை நீ அறிவதற்கான
வாய்ப்புகள் அறவே இல்லை.
கண்ணீரின் சாரைகளில்
உன் கனவுகளின் சாரல்கள்
லேசாய் என்னை நனைக்க
மறுப்பதில்லை.
நள்ளிரவில் கூட நடை
போடுகிறது என் பேனாமுனை
காகிதங்களை கவிதைகளாய்
மாற்றிவிட.
ஆனால் விழிகள் மட்டும்
என்னை விட்டு நீ பிரிந்த
அந்த வினாடிகளை அழுகையாய்
மொழி பெயர்க்கின்றன.
உனக்காக அழுவதால் அழுகையும்
கூட அழகாய் தெரிகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment