Thursday, September 25, 2008
நீ
எனக்கென இறைவனால்
இயற்றப்பட்டு கண்முன்
பூத்தக் கவிதை நீ.
முள்களை மட்டுமே
தந்தவர்களுக்கு மத்தியில்
முதன்முதலாய் பூக்களைக்
கொடுத்ததும் நீதான்.
தழும்புகளில் எல்லாம்
மயிலிறகாய்த் தடவிக்
கொடுத்தவள் நீதான்.
வலிகளால் நான்
வதையும்போது வருடி
விட்டவளும் நீதான்.
உன் புன்னகைப்
பூக்களை நுகர்ந்த பின்தான்
நானும் மனிதனானேன்.
உன்மேல் அன்பைப்
பொழியும் போதுதான்
நானும் புனிதனானேன்.
நான் தொலைத்த
வசந்த காலங்களின்
ஒட்டுமொத்த சேமிப்பு நீ.
நேற்றுவரை நான்
காத்துவந்த மெளனங்களின்
சாவி நீ.
உனக்குள் தொடங்கி
உனக்குள் முடங்கி
உனக்குள் முடிந்து
விடுமென்றால் வாழ்வு
அர்த்தம் பெறும்.
உன் சிறுவிழிகளில்
சிதைந்து,
உன் குறுநகையில்
புதைந்து,
உன் அருகாமையில்
என் ஆயுள்
முடிய வேண்டும்.
உன் நிழலினில்
என் நாட்கள்
நீள வேண்டும்.
என் அருகில் நீ
இருந்து நானழுதால்
கண்ணீரும் தித்திக்கும்.
உன் மடியில்
நிகழ்வதானால் என்
மரணம் கூட
மகிழ்ச்சிதான்.
என்றும் உனக்காக,
உதயகுமார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment