Monday, September 15, 2008

நீ

தனிமையில் வெறுமையாய் கழிந்த
தருணங்களை நீதான் நிரப்பி தந்தாய்.
இரும்பாய் கனத்த இதயத்துள்
ஈரத்தை கசிய வைத்ததும் நீதான்.

மனதிற்குள் தேங்கி நிற்கும்
வலிகளுக்கு வடிகாலாய் வந்து
இன்று நீயும் ஒரு
வலியாய் சேர்கிறாய்.

அன்பை பொழிந்து நின்ற எனக்குள்
அம்பை எய்துவிட்டு அகலுகிறாய்.
சிலகாலம் உன்னால் சிரித்து கிடந்த
நான் மீண்டும் என் பழைய
உலகத்திற்கே செல்கின்றேன்.

மரணம் என்பது
உடலை உயிர்
பிரிவது தான்
இதுநாள் வரை
நினைத்திருந்தேன்.

ஆனால் இன்று
அது நீ என்னை விட்டு
பிரிவது என
புரிந்து கொண்டேன்.

மரணித்து மீண்டும்
பிணமாய் வாழ்கிறேன்.

இரவுகளில் தலையணை
நனைக்கும் கண்ணீர்.
போலியாய் புன்னகை
சுமக்கும் உதடு.
எனக்குள் நானே கூறிக்
கொள்ளும் ஆறுதல்.
மனிதர்களிடமிருந்து விலகி
மெளனமாய் செல்வது.

எனவென் நரகவாழ்க்கை
நீள்கிறது.

கண்ணீருக்கு காவலாய் என்
கவிதைகளை வைத்துவிட்டு
கண்மூடி கதறி அழுகிறேன்.
நீ துளிகளாய் சிதறி விழுகிறாய்.

என் கவலைகள் எல்லாம்
கண்ணீரின் வழியே மெதுவாய் கரைகிறது.
நெஞ்சுக்குள் நெருப்பை விட்டு
யாரோ நெருடுவது போலொரு உணர்வு.

வலிக்கிறது. வலிதாங்க இயலாமல்
வாய் எதையோ முணுமுணுக்கிறது.
உற்று கேட்கும் போதுதான் புரிகிறது.
அது உன் பெயரென.

வலிகளை எல்லாம் வார்த்தைகளாய்
மாற்ற முடியுமெனில் தாங்கி
கொள்ள பக்கங்கள் போதாது.

நேற்றுவரை தொடுவானமாய் இருந்த
நீயின்று தொலைதூரம் ஆகிறாய்.
நானோ தொலைந்து பொகிறேன்

எல்லாமென தோன்றிய நீ
யாரோவாகி போகிறாய்.


திருவிழவில் தாயைப்
தொலைத்துவிட்டு நிற்கும்
குழந்தை தனியாக நின்று
அழுது கொண்டிருப்பதை
போல அழுதுகொண்டு
இருக்கிறேன்.


தனிமையும் வலிகளும்
தொடரும்.
நீ மீண்டும் வந்து
என்னை மீட்கும்வரை.

No comments: