Monday, September 22, 2008

நீ கவிதை எனக்கு



"உனக்காக சமீபத்தில்
எழுதிய கவிதை ஒன்றை
சொல்லட்டுமா" என்றேன்.

"ம் ம்" என்றாய்.

"மலர் கண்காட்சிக்கு
நீ செல்வது இதுவே
கடைசியாய் இருக்கட்டும்.

எல்லோரும் பூக்களை
வியந்து பார்த்து கொண்டு
நிற்க, பூக்களோ உன்னை
மயங்கி பர்த்து கொண்டு
நிற்கின்றன"

என்றேன்.

"எல்லாம் பொய்" என்றாய்.

"எல்லா கவிதையும் பொய்யைதான்
தாங்கி நிற்கும்.
மெய்யை தாங்கி இருக்கும்
ஒரே கவிதை நீதான்"

என எனக்குள் நினைத்துக்
கொண்டேன்.

"உன் நேசமும் பொய்தானா?"
என வினவுவது போல்
ஓர் பார்வையை ஏவிவிட்டு
நின்றாய்.

உன் விழிகள்
வினவிக் கொண்டே
இருந்தன.
விடை சொல்ல முடியாத
சில வினாக்களுள் உன்
விழிகளும் ஒன்று.

பதிலாக பார்வையையே
நானும் தருகிறேன்.

இதயத்தில் நான் தேக்கி
வைத்த நேசம் இன்று
இமைகளின் அடியில்
உனக்காக உறைந்து
கிடக்கிறது.

புரிந்து கொள்வாயா?
இந்த ஈரம் உன்
நேசத்தின் களிப்பில்
முளைத்தது என்று!

No comments: