உதிரும் கூந்தல் பூ
நடைபாதை வீதியில்
நடக்கும் போது
நங்கை கூந்தல்
நறுமண மலர்
புல்லின் மடியில்
பூத்துக் கிடந்தால்
நெஞ்சில் ஆனந்தம்.
பூவை எடுத்து
பூவையிடம் நீட்டி
உனதாவென வினவ,
ஆமென்று சொல்லி
அவள் குழலிடை
பதுக்கி புன்னகை
புரிந்தால் ஆனந்தம்.
இல்லையென பொய்யை
இயல்பாய் உரைத்து
என்னிடமே பூவைத்
தந்து விட்டால்
ஞாபகமாய் எனக்குள்
எப்போதும் இருக்கும்
நசுங்கிய பூ நாளெல்லாம்
ஆனந்தம்.
No comments:
Post a Comment