Wednesday, September 17, 2008

போகாதே


நீ போகிறேன் என்றாய்.
உயிர் "போகாதே" என்றது.
உதடுகள் "போ" என்றது.

உயிரும் உதடும் முரண்பட்டு
நின்றது அதுதான் முதல்முறை.

என் இருவிழிகளும்
உன் கருவிழிகளை நோக்க,
கனத்த இதயமோ
கண்ணீரை உனக்காக வார்க்க,
நீ விலகி சென்றாய்.

நீ நடந்த பாதைகளை
பார்வைகள் பின்தொடர,
புள்ளியாக மறைகிறாய்.

நானோ பூமியிலிருந்தே
மறைகிறேன்.

No comments: