Tuesday, September 30, 2008

முள் நீத்த ரோஜா




அழகு என்பது ஆணானால்
உன் அடிமையாக இருக்கும்.
பழகிப் பிரியும் வேளையில்
நெஞ்சம் கடுமையாக வலிக்கும்.

எரிமலையின் பனிப் பூவாய்
உன்னை நான் கண்டேன்.
இருள் விடிந்தும் தீராக்
காதல் என்னுள் கொண்டேன்.

சிவனுக்கு அந்த செங்கமலக்
கண்ணாள் பார்வதி துணை.
இவனுக்கு இடர் நீத்த
நங்கை நீயே துணை.

கவிதை விதைகளை
என்னுள் துவினாய்.

காதல் ஊற்றி
வளர்த்த செடி,

காலம்தான் அழிக்குமோ!
தமிழாக செழிக்குமோ!

உணர்ந்திட எனக்கு
உயிர் இல்லை.
உரைத்திடு முள்
நீத்த ரோஜாவே.

1 comment:

ers said...

கவிதை அழகு...
இங்கும் வாங்க
http://spl.nellaitamil.com/tamil/?cat=9