Monday, September 22, 2008

நினைவுகள்




நீ வந்து விழுந்த
இந்த நெஞ்சம்
உன்னைத் தூக்கிக்
கொண்டு எங்கும் ஓடும்.

நீ இல்லை எனத்
தெரிந்தும் கண்கள்
உன்னை எங்கும் தேடும்.


நிலவொளியில் ததும்பும்
இரவுகளில் உன் நினைவுகள்
இதமாய் தாலாட்டும்.
வெப்ப நிலங்களில்
வேகும் கணங்களில்
ஞாபங்கள் நீராட்டும்.

இரவுப் பொழுது,
நிலவு வெளிச்சம்.
ஒற்றையடிப் பாதை,
வயல்வெளி காற்று.
மண்வாசனை

இவற்றோடு அசைபோட்டுக்
கொண்டிருக்கிறேன்.
உன் நினைவுகளை.

2 comments:

Anonymous said...

nalla iruckunga......

உதயகுமார் said...

Thanks bhubesh