Thursday, September 25, 2008

பாரதி கண்ணம்மா


எங்கேயோ கேட்ட குரல்
இங்கே வந்து ஒலிப்பதென்ன?
நெஞ்சில் விழுந்த விதை
இன்று விழுதாய் முளைப்பதென்ன?

தீதில்லா ஒரு காதல்
தீர்ந்து போகக் கூடுமோ?
மேகம் இருக்க நிலவை
மின்னல் வந்து மூடுமோ?

யாரடி நீ கண்ணம்மா?
பாரதியின் கவி பெண்ணம்மா

ஓரப்பார்வையில் உயிர்
என்னை அழைப்பதேனோ!
ஈரப் போர்வையாய் இதயம்
நனைந்து உயிர் பிழைப்பதேனோ!

இரண்டடி குறள் இனிமைதானடி
ஓரடி நீயடி மற்றடி நானடி.
பிரித்திட யாரடி பாவையே கூறடி.

மனம் ஒன்றியபின் மானிடர்
என்ன செய்யக் கூடும்.

No comments: