
உன்
கற்றை கூந்தலின்
ஒற்றை குழல்
சுற்றி திரிந்தது,
மேகங்கள் பிறந்தன.
நெற்றி வியர்வை
பூமியை முத்தமிட்டது.
பனித்துளி படர்ந்தது.
இமைகளை திறந்தாய்.
கதிரவன் உதித்தான்.
இமைகளை மூடினாய்.
இரவுகள் முளைத்தன.
கொலுசுகள் அசைந்தன.
இடிகள் கொட்டின.
பார்வைகள் தொட்டன.
மின்னல் வெட்டியது.
வாயை திறந்தாய்.
பூக்கள் மலர்ந்தன.
இதழ்கள் அசைந்தன.
பறவைகள் பறந்தன.
கண்ணீர் விட்டாய்.
பரவைகள் விரிந்தன.
கடிந்து பேசினாய்.
புயல் வீசியது.
என்னுடன் நடந்தாய்.
தென்றல் பேசியது.
நீ சிரித்தாய்
அலைகள் மோதின.
உன் வளையல் கண்டதும்
வானவில் மிதந்தது.
உன் கழுத்து
என்புறம் திரும்பியது.
சங்குகள் தோன்றின.
உன் பாதம்
மண்ணை தொட்டது.
சோலைகள் குவிந்தன.
நீ என்னை விட்டுப்
பிரிந்து சென்றாய்.
பாலைகள் ஊன்றின.
உன் கூந்தல் பூக்கள்
வாடி நின்றன.
பஞ்சம் உண்டானது.
உலகம் தோன்றியதை
பலவிதிகள் கூறினாலும்,
என் உலகம் தோன்றியது
என்னவோ உன்னால் மட்டுமே.
No comments:
Post a Comment