Monday, September 15, 2008

தேவதை

ஒவ்வொரு முறை நீ
இமைக்கும் போதும் எனது
இரவு பகல் முளைக்கிறது.

மயிலிறகு சேகரிக்கும் சிறுவனாய்
உன் புன்னகையை சேமிக்கிறேன்.
"குட்டி போடுமா?" உன் புன்னகை.

பாடதிட்டம் மாறி வந்த
வினாத்தாளை பார்க்கும்
மாணவனாய் எப்போதுமே
உன்னை வியந்து பார்க்கிறேன்
எல்லா முறையும்.

ஆயுள் கைதியைப் போல்
சிக்கிக் கொள்கிறேன்.
நீ சிரிக்கும்போது தெரியும்
தெற்றுப் பல்லில்.

ஆனால் விடுதலை
மட்டும் செய்துவிடாதே.

நீ என்னோடு நடக்கையில்
நாள்கள்கூட திருநாளாகும்.
உன் கரத்தில் தரும்போது
பழையசாதம்கூட விருந்தாகும்.

தேவதையையும் சரி
தெய்வத்தையும் சரி
நேரில் கண்டதில்லை.
உன்னை காணும்
முன்புவரை.

No comments: