துயரத்தில் உயிர் துப்பும்
காலத்தின் கரையாத கரிப்பு.
அன்பின் மிகுதியில் கண்கள்
பேசும் திரவக் கவிதை.
குற்றத்தில் குறுகிப் போகும்
குருதியின் நிறமற்ற நீர்.
இயலாமையில் இதயங்கள் வீசும்
ஆற்றாமையின் அடிமைத் தூது.
துரோகத்தில் துய்த்து போன
விழிகளின் வியர்வைத் துளி.
நெடுநாளைய மெளனம் நிரப்பும்
வார்த்தையின் உப்பு வலி.
களிப்பில் இமைகள் தள்ளி
விடும் இன்பத்தின் ஊற்று.
இதில் நீ எதற்காக
அழுகிறாய்?
என்னுயிரே!
நீ அழும்போதெல்லாம்
என் கரங்களும் கண்களும்
காத்து இருக்கும்.
முடிந்தால் உன்
கண்ணீரைத் துடைக்க,
இல்லையேல் உன்னோடு
சேர்ந்து அழ.
1 comment:
அன்பின் மிகுதியில் கண்கள்
பேசும் திரவக் கவிதை.
குற்றத்தில் குறுகிப் போகும்
குருதியின் நிறமற்ற நீர்.ஃஃஃ
பிடித்த வரிகள்
http://spl.nellaitamil.com/tamil/?cat=9
Post a Comment